இலங்கைசெய்திகள்

நுளம்புகளை அழிக்க புதிய பொறிமுறை!

Share

நுளம்புகளை அழிக்க புதிய பொறிமுறை!

அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்கு ‘மொஸ்கிட்டோ டன்க்’ என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கை, இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்காக ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ‘மொஸ்கிட்டோ டன்க்’ என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 35 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் சுமார் 400 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.நாடாளாவிய ரீதியில் உள்ள 370 பொது சுகாதார சேவைப் பிரிவுகளில், 39 சுகாதார சேவை பிரிவுகள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்படட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்த தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...