இலங்கைசெய்திகள்

நுளம்புகளை அழிக்க புதிய பொறிமுறை!

Share

நுளம்புகளை அழிக்க புதிய பொறிமுறை!

அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்கு ‘மொஸ்கிட்டோ டன்க்’ என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கை, இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்காக ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ‘மொஸ்கிட்டோ டன்க்’ என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 35 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் சுமார் 400 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.நாடாளாவிய ரீதியில் உள்ள 370 பொது சுகாதார சேவைப் பிரிவுகளில், 39 சுகாதார சேவை பிரிவுகள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்படட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்த தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...