உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கடற்படை கப்டன் நிஹால் கெப்பட்டிபொல இதனை தெரிவித்துள்ளார்.
400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பலில் சுமார் 24 ஆயிரம் கொள்கலன் பெட்டிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மாத்திரமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.
Leave a comment