மின்னல் தாக்கி 1
இலங்கைசெய்திகள்

யாழில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Share

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது.

அவ்வேளையிலையே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை அனைத்து முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்

இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்ரரை லட்சம் ரூபா இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இலங்கைஏனையவைபிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: அடுத்த சில நாட்களில் உர மானியம் வழங்கப்படும்!

தேக்கமடைந்துள்ள உர மானியக் கொடுப்பனவுகள் அனைத்தும் அடுத்த சில தினங்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக...

image 1345fe3a72
செய்திகள்அரசியல்இலங்கை

போர் வெற்றியைப் பேச ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இல்லை- நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆவேசம்!

78-ஆவது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான...

127533494 slppmeeting001 1
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதத்தை ஜனாதிபதி செயலில் காட்ட வேண்டும்- வடக்கு-கிழக்கு கரிநாள் போராட்டத்திற்கு SLPP கடும் எதிர்ப்பு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘கரிநாள்’ அனுஷ்டிக்கப்பட்டு பேரணிகள்...

vikatan 2026 02 05 b52destm Deepak Chopra
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விமானத்தில் பயணம்: அவர் எனது நண்பர் அல்ல – தீபக் சோப்ரா விளக்கம்!

அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களில் தீபக் சோப்ராவின் பெயர் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து,...