24 66305a02351e1
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை

Share

யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை

யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பரிதாபகரமான சம்பவம் நேற்றையதினம் (29.04.2024) இடம்பெற்றுள்ளது.

ஆவரங்காலிலுள்ள கிழக்கு – புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா என்ற ஐந்து வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த சிறுமிக்கு கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட வேளை காய்ச்சல் சுகமாகியுள்ளது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் அச்சுவேலி வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், திடீரென நேற்றையதினம் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சிறுமி பரிதாபமாக மரணித்துள்ளார்.

மேலும், சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மரணத்துக்கான காரணம் மூளைக் காய்ச்சல் என உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...