திருகோணமலையில் கடத்தலில் தப்பியோடிய 14 வயது சிறுவன்!
திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் வீதியில் சென்ற வேளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்த முயற்சித்தாக தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்த சிறுவன், அவனது ஆடை கிழிந்த நிலையில் வீட்டுக்கு சென்று நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankaNews
Leave a comment