25 11
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்: அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்: அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு 964 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணம் அனுப்பல் மற்றும் அதன் மதிப்பு 572 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் மொத்த அளவு 5970 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 58% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் இலங்கைக்கு அனுப்பும் பணம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அந்நிய செலாவணி இன்றியமையாதது மற்றும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 187,000 இற்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்திற்கு பல நலன்புரி வசதிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...