25 11
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்: அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்: அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு 964 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணம் அனுப்பல் மற்றும் அதன் மதிப்பு 572 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் மொத்த அளவு 5970 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 58% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் இலங்கைக்கு அனுப்பும் பணம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அந்நிய செலாவணி இன்றியமையாதது மற்றும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 187,000 இற்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்திற்கு பல நலன்புரி வசதிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...