29 8
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிகளில் இருந்து நீக்கப்பட்ட அரச அதிகாரிகள் : வெளியான தகவல்

Share

தேர்தல் பணிகளில் இருந்து நீக்கப்பட்ட அரச அதிகாரிகள் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை (Hambantota) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர (M. P. Sumanasekara) தெரிவித்துள்ளார்.

19 அரச அதிகாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, ஒன்பது அதிபர்கள், ஒரு பிரதி அதிபர், நான்கு ஆசிரியர்கள், ஒரு பொது சுகாதார பரிசோதகர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் மூன்று வைத்தியர்கள் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பல முறை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 19 அதிகாரிகளில் 9 பேர், தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வெற்றிடமான இடத்திற்கு தற்போது அதிகாரிகள் நிரப்பப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 6
உலகம்செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் தம்மீது முதலில் தாக்குதல் நடத்தாவிட்டால் ஈரான் பதிலடி தாக்குதலை ஒருபோதும் நடத்தியிருக்காது என ஈரான்...

Untitled 1 Recovered Recovered 5
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார...

21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...