29 8
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிகளில் இருந்து நீக்கப்பட்ட அரச அதிகாரிகள் : வெளியான தகவல்

Share

தேர்தல் பணிகளில் இருந்து நீக்கப்பட்ட அரச அதிகாரிகள் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை (Hambantota) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர (M. P. Sumanasekara) தெரிவித்துள்ளார்.

19 அரச அதிகாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, ஒன்பது அதிபர்கள், ஒரு பிரதி அதிபர், நான்கு ஆசிரியர்கள், ஒரு பொது சுகாதார பரிசோதகர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் மூன்று வைத்தியர்கள் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பல முறை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 19 அதிகாரிகளில் 9 பேர், தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வெற்றிடமான இடத்திற்கு தற்போது அதிகாரிகள் நிரப்பப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...