தகாத உறவில் ஈடுப்பட்ட பிக்குவை நையப்புடைத்தவர்கள் 8 பேர் அதிரடியாக கைது
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதான சந்தேகநபர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Leave a comment