75 கோடி மோசடி! – திலினிக்கு எதிராக வைத்தியர் முறைப்பாடு

image cb6b371e3f

பல பில்லியன் டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக விஷேட வைத்தியர் ஒருவர் இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

75 கோடி ரூபா பணத்தை ஏமாற்றி விட்டதாக அவர் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எழுத்துபூர்வமாக தனது முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 10 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

#SriLankaNews

Exit mobile version