26 8
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

Share

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்புமனு கையளிக்கும் தினத்தன்று, கடமை நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க சென்ற டிப்போ முகாமையாளர் உட்பட 6 பேர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை களுத்துறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஹொரணை டிப்போ முகாமையாளர், உதவி முகாமையாளர் (கட்டுப்பாடு) மற்றும் நான்கு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக NB 6182 என்ற ஹொரண டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தில் இவர்கள் 6 பேரும் பொரளை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அரச பேருந்தில் பொரளைக்கு பயணித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...