இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பாரியளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த படகு மற்றும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரைக்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
#srilankaNews
Leave a comment