அரசியல்இலங்கைசெய்திகள்

58 கைதிகள் மாயம்! – சிறை ஆணையாளர் விளக்கம்

Share
fb photo
Share

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார்.

சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமுக்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது நேற்றிரவு குழுவொன்று தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலின்போது 58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும், நேற்றுக் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகக் கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

குறித்த கைதிகளைக் கண்டறியும் நடவடிக்கையில் தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...