24 665b88ca93e35
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் இழப்பு

Share

இலங்கைக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் இழப்பு

இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51,150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் வரலாற்றில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகவும் அது 34,000 மெற்றிக் தொன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தி 2015 இல் 328,800 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 278,489 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 256,039 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேயிலை ஏற்றுமதி 2013 இல் 319,700 மெற்றிக் தொன்களாலும் 2015 இல் 306,900 மெற்றிக் தொன்களாலும் 2020 இல் 265,569 மெற்றிக் தொன்களாலும் 2023 இல் 241,912 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியினால் ஏற்படும் இழப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் 75 வீதத்திற்கு சமம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...