செய்திகள்இலங்கை

500 மில்லிலீற்றர் தண்ணீர்போத்தல் 19ரூபாவிற்கு சதோசவில்!!

image 4706d4bd61
Share

500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

தற்போது 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், தண்ணீரைப் பயன்படுத்திய பின்னர் வெற்றுப் போத்தல் வீசப்படுகிறது.

இதனால் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. எனவே, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, மீள் சுழற்ச்சி செய்யக் கூடிய புதிய போத்தல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் அறிமுக விலையாக 6 ரூபா கழிவு வழங்கப்படுகிறது. 29 ரூபாவிற்குப் பெற்றுக்கொள்ளும் தண்ணீர் போத்தல்களைப் பயன்படுத்திவிட்டு, போத்தல்களை சதொசவிடம் மீள ஒப்படைக்கப்படும் பட்சத்தில் 10 ரூபா பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே 19 ரூபாவிற்கு 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை ச.தொ.ச. விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவில் முழு அளவில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...