1 4 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பஞ்சிகாவத்தையில் பொலிஸ் வாகனங்கள் அடித்து உடைத்து எரிப்பு!

Share

கொழும்பிலுள்ள நகர்ப்பகுதியான பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தில் மாத்திரம் 5 பொலிஸ் வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து உடைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகையின் முன்பாகவும், காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர்கள் மீது இரும்புக் கம்பிகளுடன் நேற்றுப் பகல் வந்த ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்துடன் குறித்த இரு இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆகிய கூடாரங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கித் தீயிட்டு எரித்திருந்தனர்.

மேற்படி இரு தாக்குதல் சம்பவங்களும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அரச வன்முறையாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு 10, பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தின் வீதியில் நேற்று மாலை இறங்கிய அப்பகுதி மக்கள், நள்ளிரவு வரை மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பஞ்சிகாவத்தை சுற்றுவட்டப் பகுதிகளால் வந்த பொலிஸாரின் 5 வாகனங்களை இடைமறித்த மக்கள், அதிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கினர்.

மக்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் தாம் வந்த வாகனங்களைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். எனினும், மக்களின் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்து கிடந்தார். அவரை வீதியால் வந்த தனியார் வாகனம் ஒன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மக்கள் அனுப்பிவைத்தனர்.

இதேவேளை, மக்களின் பிடிக்குள் சிக்கிய 5 பொலிஸ் வாகனங்களும் (ஜீப் 01, ஹயஸ் 01, பஸ் 01, கார் 02) வீதியில் வைத்து அடித்து உடைக்கப்பட்டன. அதன்பின்னர் அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நேற்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையிலான 6 மணிநேரத்துக்குள் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றன. நள்ளிரவு 12 மணிவரை மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

#SriLankaNews

2 3 scaled

3 3 scaled

4 3 scaled

5 2 scaled

6 1 scaled

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...