47 பேருக்கு வவுனியாவில் தொற்று

df4

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் பெறுபேறும் நேற்று வெளியாகிய நிலையில் 47 பேர் கொரோனாத் தொற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் மறவன்குளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிராமபுரம், சிதம்பரபுரம், வன்னிக் கோட்டம் மற்றும் பூவரசன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 5 வயதுக்கு குறைவான 3 சிறுவர்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version