6 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் கைது!

Share

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து நேற்று(19) நடாத்திய சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 12 பேரும், சந்தேகத்தின் பேரில் 648 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 230 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 142 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 27 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 15 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 557 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம்...

1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி...

image 1843c289c1
செய்திகள்இலங்கை

5 வயது சிறுமி சித்திரவதை: தாயின் கள்ளக்காதலன் கொடூரம்! – சந்தேக நபர் தலைமறைவு!

மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் 23 வயது பெண்ணின் 5 வயது...

24 671602c72b24d.webp
செய்திகள்இந்தியா

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 38ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: 68 பேருக்கு அஞ்சலி!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில்  சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 38வது நினைவு தினம் இன்று (அக்...