10 31
இலங்கைசெய்திகள்

ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 43 பேர் அதிரடியாக கைது

Share

ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 43 பேர் அதிரடியாக கைது

நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் விருந்து நடத்தியதாக கூறப்படும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 10 இளம் பெண்களும், 33 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் உள்ளவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரணை மற்றும் பல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...