1 7
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

Share

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 உறுப்பினர்கள் தங்களது அரசியல் கட்சியை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் கிட்டத்தட்ட 15 பேர் முக்கிய கட்சிகளில் பதவி வகிப்பதாக தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு குழுவிரும் தீர்மானித்துள்ளனர்.

மேலும் பல உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் கட்சிமாற்றம் தொடர்பில் ஏற்கனவே தலைவர்களுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டதாகவும், தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னர் உரிய முடிவை அறிவிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டணியில் 17 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று தடவைகளில் இணையவுள்ளதாக மற்றுமொரு அரசியல் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...