24 669350d7bef43
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 40 கொள்கலன்கள் இயற்கை எரிவாயு

Share

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 40 கொள்கலன்கள் இயற்கை எரிவாயு

இலங்கை ஏற்றுக்கொண்ட இந்திய (India) அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில், புதுடில்லியைத் (New Delhi) தலைமையிடமாகக் கொண்ட பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், இலங்கையின் கெரவலப்பிட்டியவில் உள்ள வெப்ப ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 40 கொள்கலன்கள் என்ற விகிதத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கவுள்ளது.

இவை இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்டு, கெரவலப்பிட்டியவில் உள்ள இலங்கையின் LTL ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும்.

திட்டப்படி, இந்திய நிறுவனம், ஒரு நாளைக்கு 60-70 கொள்கலன் அளவில் ஏற்றுமதியை விரிவுபடுத்த சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், போட்டி கேள்வி, பத்திரக்கோரல் இல்லாததால் ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இது அரசாங்கத்திற்கு-அரசாங்கத்திற்கு (G-to-G) ஒப்பந்தம் என்று விபரிக்கப்படுகிறது

எனினும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான PLL இலிருந்து எரிவாயுவை நேரடியாக வாங்குவதற்கு, சுருங்கிய உரிமைக் கட்டமைப்பைக் கொண்டLTL ஹோல்டிங்ஸ் லிமிடெட்.டிகு உரிமம் வழங்க இலங்கை முன்மொழிந்துள்ளது.

முன்னதாக, சீன ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) மற்றும் பாகிஸ்தானின் என்க்ரோ கோர்ப்பரேஷன் ஆகியவை கெரவலப்பிட்டியில் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறு எரிவாயு அலகு, கடல் மற்றும் கடலோர மறு எரிவாயு எல்என்ஜி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வழங்கியிருந்த போதும், இலங்கை கடந்த ஆண்டு, அவற்றை இடைநிறுத்தியது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...