இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் - 4 மாத குழந்தை மரணம்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்

Share

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 04 மாத தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு பொதுவான காய்ச்சலுக்கான அறிகுறிகளும் தென்பட்டது, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று காலை வரை உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்த போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னரே தடுப்பூசி மரணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...