15 18
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்

Share

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு இளைஞர்களுக்கும், நிரந்தர குடியிருப்பு இல்லாத ஒருவருக்கும் இடையே தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக 38 வயதுடைய நபரை இளைஞர்கள் தடிகளால் அடித்து உதைத்து கொலை செய்தனர்.

இந்தக் கொலை நேற்று முன்தினம் இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொரளை, வனாத்தமுல்ல பகுதியை சேர்ந்த 19 முதல் 22 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த நபரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தது,

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...