25 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

Share

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதி வேட்பாளரான அஹிதுருஸ் மொஹமட் இல்யாஸின் திடீர் மரணம் காரணமாக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 38பேர் மாத்திரமே போட்டியிட்டனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, திலித் சுசந்த ஜயவீர, சரத் மனமேந்திர, பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க, கே.கே.பியதாஸ, சிறிபால அமரசிங்க, சரத் கீர்த்திரத்ன, லலித் டி சில்வா ஆகியோர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், மயில்வாகனம் திலகராஜ், அபுபக்கர் மொஹமட் இன்பாஸ், ஏ.எஸ்.பி.லியனகே, பானி விஜேசிறிவர்தன, அஜந்த டி சொய்சா, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நுவன் சஞ்சீவ போபகே, கே.ஆனந்த குலரத்ன ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஓஷல லக்மால் அனில் ஹேரத், ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க, அக்மீமன தயாரத்ன தேரர், கே.ஆர்.கிஷான், பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த, அநுர சிட்னி ஜயரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகிந்த தேவகே, மொஹமட் இல்லியாஸ், லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ, அன்டனி விக்டர் பெரேரா, கீர்த்தி விக்ரமரத்ன, மரக்கலமானகே பிரேமசிறி, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, டி.எம்.பண்டாரநாயக்க, அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா, அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான் ஆகியோரும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...