3,120 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவுடன் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் வகையில் மொத்த சந்தைக்கு எரிவாயு வெளியிடப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews