பத்து நாட்களில் மாத்திரம் 31 ஆயிரம் கடவுச்சீட்டுகள்!

download 2 1

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இம்மாதத்தில் முதல் பத்து நாட்களில் மாத்திரம் 31 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோக்கப்பட்டுள்ளன.

வழமையாக 10 நாட்களில் சுமார் 10 ஆயிரம் வரையான பாஸ்போர்ட்டுக்களே விநியோகிக்கப்படும். எனினும், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், தொழில் நிமித்தம் பலர் நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version