செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவில்லை!!!

Share
file 20200511 49558 s7f11n
Share

இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கூறியவை வருமாறு,

” எமது நாட்டு வெளிவிவகாரக் கொள்கையானது ஒரு திசையை நோக்கி இழுத்துச்செல்லப்படுகின்றது. இது பயங்கரமான நிலைமை ஏற்பட வழிவகுக்கும்.

அதேபோல நாளொன்றுக்கு லட்சம் ரூபாவை செலவளிப்பவர்களுக்கு, இந்நாட்டில் ஒருவேளை உணவைகூட உண்பதற்கு கஷ்டப்படுபவர்களும் வாழ்கின்றனர் என்பது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதுவும் பெரும் பிரச்சினையாகும்.

ஏனெனில் இந்நாட்டில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மந்த போசனை பிரச்சினையை எதிர்கொள்கின்றது. அத்துடன், 30 வீதமான மக்களுக்கு மூவேளை உணவை முறையாக உண்ண முடியாத நெருக்கடியான பொருளாதார நிலை உருவாகியுள்ளது. இந்நிலைமை குறித்து நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

எமது ஆட்சிகாலத்தில் இதுவரை நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் 2022 இல் மீளாய்வு செய்யப்பட வேண்டும். சுய விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு சுய விமர்சனம் இல்லையேல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...