tamilnaadi 54 scaled
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பால் செலவாகும் 232 மில்லியன்

Share

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பால் செலவாகும் 232 மில்லியன்

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு மாதாந்தம் 232 மில்லியன் ரூபா கூடுதல் செலவாகும் என நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

குறித்த கூட்டமானது, நேற்றைய தினம் (06.03.2024) இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சாதாரண பிரஜைகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த வேளையில் தமது சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றது என கட்சித் தலைவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கி அதிகாரிகள் சம்பள உயர்வைப் பெறுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதிலும் கூட, இந்த நாட்டிலுள்ள மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலையில் அவர்கள் சம்பள உயர்வைக் கைவிட்டிருக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கருதுவதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் திணைக்களத்தில் கூட்டு ஒப்பந்தம் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த சம்பள உயர்வு சட்டவிரோதமானது என கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே மத்திய வங்கி ஒரு சுயாதீன அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாகவும், தமது சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல எனவும், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு கட்சி தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

அது மாத்திரமன்றி, முன்னதாக வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் கூட்டு ஒப்பந்தம் பதிவு செய்யப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...