Screenshot 2022 03 23 12 42 09 24
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இழுவைப் படகுகளுடன் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், ஊற்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீரியல் வளத்துறை அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

01) இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை.

02) நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை. கைதுசெய்யும் வேளையிலும் வலைகளைத் தொடக்கறுத்து வைக்காமை.

03) தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை.

– ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிவான் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம் சதாரண சிறைத் தண்டணையை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நிபந்தனையின் அடிப்படையில் 22 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...