Screenshot 2022 03 23 12 42 09 24
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இழுவைப் படகுகளுடன் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், ஊற்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீரியல் வளத்துறை அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

01) இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை.

02) நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை. கைதுசெய்யும் வேளையிலும் வலைகளைத் தொடக்கறுத்து வைக்காமை.

03) தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை.

– ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிவான் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம் சதாரண சிறைத் தண்டணையை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நிபந்தனையின் அடிப்படையில் 22 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...