கோட்டாபய 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

’21’ஐ முன்வைக்க அமைச்சரவை உப குழு! – கோட்டாவால் நியமனம்

Share

புதிய அமைச்சரவை நியமனத்துக்குப் பின்னர் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இந்த யோசனைக்கு உடன்படவில்லை.

இதன்படி, 19ஆவது திருத்தச் சட்டம் போன்று 20ஆவது திருத்தச் சட்டத்தில் சாதகமான விடயங்களும் காணப்படுவதால், அவை இரண்டிலும் உள்ள சாதகமான விடயங்களைக் கொண்டு 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அதற்காக அமைச்சர்கள் அடங்கிய உப குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.

அமைச்சர்களான அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரை உப குழுவில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த உப குழுவால் தயாரிக்கப்படும் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தெரிவுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...