16 12
இலங்கைசெய்திகள்

பசிலின் காலத்தில் நடந்த மோசடி: முன்னிலையான ரகசிய சாட்சியம்!

Share

பசிலின் காலத்தில் நடந்த மோசடி: முன்னிலையான ரகசிய சாட்சியம்!

சுற்றுலா அபிவிருத்திக்காக 2014 ஆம் ஆண்டு ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமான செலவில் டி-சர்ட்கள் அச்சிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு ரகசிய சாட்சியாளர் நீதிமன்றில் முன்னிலைகியாகியுள்ளார்.

இந்த நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) முன்னிலையாக அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிதி மோசடி தொடர்பான உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்த ரகசிய சாட்சியத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த ரகசிய சாட்சியம் பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...