Connect with us

இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

Published

on

5 61

ரஷ்ய இராணுவத்தில் (Russia Army) இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினரிடம் வடக்கு ஆளுநர் கையளித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் (N. Vethanayagan), புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.)  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழு தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, கிறிஸ்டின் பார்ஸோ, தான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதேவேளை ஆளுநர் இங்கு தெரிவித்ததாவது,“தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருப்பதனால் அதற்கான உதவிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுகின்றது.

இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமை இதற்குக் காரணம். வேலை வாய்ப்பு இன்மையால், இளையோர் உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது.

முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து, இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்கிறோம். வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஐ.ஓ.எம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் ஐ.ஓ.எம்மிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்22 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 31 ஜனவரி 2025 – Daily Horoscope

Post Views: 10

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 30 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 30.01.2025, குரோதி வருடம் தை மாதம் 17, வியாழக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், புனர்பூசம் சேர்ந்தவர்களுக்குச் சந்திராஷ்டமம்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 29 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 29.01.2025, குரோதி வருடம் தை மாதம் 16, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 28 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 28.01.2025, குரோதி வருடம் தை மாதம் 15, செவ்வாய்க் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 27 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 27.01.2025 குரோதி வருடம் தை மாதம் 14, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள சேர்ந்த கார்த்திகை, ரோகிணி...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 26.01.2025, குரோதி வருடம் தை மாதம் 13 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள சேர்ந்த பரணி, கார்த்திகை...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 25 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 25.01.2025, குரோதி வருடம் தை மாதம் 12, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு...