8 54
இலங்கைசெய்திகள்

அநுர அரசில் தொடரும் கைதுகள்: பிணையில் சென்ற முன்னாள் முக்கிய அதிகாரி

Share

இன்று (30) பிற்பகல் கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் , 200,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த குமார மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு குருநாகலில் சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற இசுரு சவிய கொண்டாட்டத்திற்காக கூட்டுறவு நிதியிலிருந்து பணம் செலவழித்தது தொடர்பாக சந்தேகநபரான பிரியந்த மாயாதுன்னே குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையொன்றை நடத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் அனுப்பிய பின்னர், சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த நேரத்தில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார மாயாதுன்னே, இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...