13 35
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

தற்போது காணப்படும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவான டெண்டர் செயல்முறை மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (23) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறிப்பிட்டு, தற்போதைய முறையின் கீழ் புதிய கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான காலக்கெடுவை தொடர்பில் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

இதன்படி, இன்று (ஜனவரி 23) யாராவது நிகழ்நிலையில் முன்பதிவு செய்தால் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஆரம்ப திகதி ஜூன் 27 ஆகும்.இது சுமார் ஐந்து மாத காத்திருப்பு நேரத்தை பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டார்.

எனினும், அவசரகால நிகழ்வுகளுக்கு, ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கைகளை மதிப்பீடு செய்து அங்கீகரிக்க குடிவரவுத் துறைக்குள் ஒரு பிரத்யேக குழு நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த அமைப்பு வழக்கமான சேவைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் அதே வேளையில் அவசரநிலைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...