13 35
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

கடவுச்சீட்டு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

தற்போது காணப்படும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவான டெண்டர் செயல்முறை மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (23) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறிப்பிட்டு, தற்போதைய முறையின் கீழ் புதிய கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான காலக்கெடுவை தொடர்பில் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

இதன்படி, இன்று (ஜனவரி 23) யாராவது நிகழ்நிலையில் முன்பதிவு செய்தால் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஆரம்ப திகதி ஜூன் 27 ஆகும்.இது சுமார் ஐந்து மாத காத்திருப்பு நேரத்தை பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டார்.

எனினும், அவசரகால நிகழ்வுகளுக்கு, ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கைகளை மதிப்பீடு செய்து அங்கீகரிக்க குடிவரவுத் துறைக்குள் ஒரு பிரத்யேக குழு நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த அமைப்பு வழக்கமான சேவைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் அதே வேளையில் அவசரநிலைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...