18 27
இலங்கைசெய்திகள்

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு

Share

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு

மட்டக்களப்பு(batticaloa) திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் வந்து வேலி நாட்ட முயன்ற கொழும்பைச்(colombo) சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் காவல்துறை அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானமாக பயன்படுத்திவரும் ஒருபகுதியை இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் வந்து கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தான் 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் தன்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் உள்ளதாக காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் இது அரச காணி எனவும் இவர் ஒரு காவல்துறை அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர். இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஆவணங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான் வரவில்லை.

அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது காவல்துறை அதிகாரி இந்த மைதான காணி 10 பேருக்கு இருப்பதாகவும் இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் தனது 15 பேச் காணியை தருமாறும் தான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும். நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது தடுத்தோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் மக்கள் குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய காவல்துறை அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த காவல்துறை அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மட்டு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...