2 40
இலங்கைசெய்திகள்

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டனம்

Share

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா எம்.பி. – வலுக்கும் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்து சமயத்தையும் இந்து சமயத்தை பின்பற்றுபர்களையும்  இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் கேவலமான வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டமை கண்டனத்திற்குரியது.

இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளைப் பேசுபவருக்கெதிராக இலங்கைச் சட்டத்தின் படி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

இதே போன்று இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாகப் பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

ஜனாதிபதியோ இந்து கலாசார அமைச்சோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள் சைவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடுவோம்.

மேலும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...