25 678e6a04bf846
இலங்கைசெய்திகள்

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

Share

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை இணைப்பதற்கான கலந்துரையாடல்களைத் தொடங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் பெற்றுள்ளது.

இன்றையதினம் (20) இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், புறக்கோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல ஆகியோரின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...