15 22
இலங்கைசெய்திகள்

அநுர ஆட்சியில் 750,000 அரச ஊழியர்களுக்கு ஆபத்து : கவலையில் நாமல்

Share

அநுர ஆட்சியில் 750,000 அரச ஊழியர்களுக்கு ஆபத்து : கவலையில் நாமல்

அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய அலுவலகத்தை பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அரசாங்கம் வெளியிடும் தகவலுக்கமைய, அவர்கள் ஒரு அரசியல் வேட்டைக்குத் தயாராகி வருவது தெளிவாகின்றது.

அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தாலும், அதற்கான திட்டம் என்ன என்பதை அறிவிக்கவில்லை.

அந்த சூழ்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்குள்ளான அனைவருக்கும் ஆதரவாக நிற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்தது. அதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அரச இயந்திரத்திற்குள் ஏதோ ஒரு வகையான வேட்டை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அதில், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மக்களுக்கு தெரியவந்துவிட்டது. இந்த அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தைப் போலவே அரசியல் அடக்குமுறையைக் கொண்டு வந்து, திருடனைப் பிடித்தோம், சிறைப்படுத்துகிறோம் என கூறி அரசியல் பிரசாரத்தை தொடர அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது.

அதேவேளை, ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அரசாங்கம் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக நாமல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக அடக்குமுறையின் அடுத்த கட்டம் அரசியல் அடக்குமுறை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் நம்மைத் தடுக்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...