13 22
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Share

முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijithamuni Soysa) பயன்படுத்திய ஜீப் ரக வாகனம் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஜீப் ரக வாகனம் கடந்த மாதம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பண்டாரவளை (Bandarawela) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த விஜித் விஜயமுனி சொய்சா நேற்று முன்தினம் (14) வலான ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலையானார்.

இரண்டு சட்டத்தரணிகளுடன் வலானை ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்ற அவர், வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் திடீரென சுகவீனமுற்றதாக கூறி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பிறிதொரு திகதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...