16 11
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

Share

நெற்பயிற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியத்துடன் கூடுதலாக 25000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எம்.ஓ.பி உரத்தையும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெரும் போகத்தின் போது, அரசாங்கம் ரூ. 25,000 உர மானியத்தையும் இலவச சிவப்பு தூள் உரத்தையும் வழங்குவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன்படி, 2024 ஒக்டோபர் 01 முதல் 2025 பெப்ரவரி 01 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரூ. 25,000 உர மானியம் இரண்டு கட்டங்களாக, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல் தவணை ரூ. 15,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பயனுள்ள அமைப்பை செயல்படுத்த அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...