16 11
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

Share

நெற்பயிற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியத்துடன் கூடுதலாக 25000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எம்.ஓ.பி உரத்தையும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெரும் போகத்தின் போது, அரசாங்கம் ரூ. 25,000 உர மானியத்தையும் இலவச சிவப்பு தூள் உரத்தையும் வழங்குவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன்படி, 2024 ஒக்டோபர் 01 முதல் 2025 பெப்ரவரி 01 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரூ. 25,000 உர மானியம் இரண்டு கட்டங்களாக, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல் தவணை ரூ. 15,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பயனுள்ள அமைப்பை செயல்படுத்த அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...