9 6
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

Share

அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”மக்களுக்கு விஷத்தை வழங்கியாவது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையா?

சட்ட விரோத மதுபானத்துக்கு பதிலாக குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிக்கப் போவதாக அமைச்சரொருவர் தெரிவித்துள்ளமை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாகும்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகக் கூட சட்ட விரோத மதுபானம் உள்ளிட்டவற்றைக் அழிக்கலாம். அதனை விடுத்து குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிப்பது சமூகத்தில் பாரிய சீரழிவுகளுக்கு வழிவகுக்கும்.

குறைந்த விலையில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதற்காக சீனியில் உற்பத்தி செய்யப்படும் எதனோல் மூலம் மதுபானத்தை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார்.

சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மதுபானத்தை அரசாங்கமே தயாரிப்பது தான் மாற்று வழியா? இதுவா அரசாங்கத்தின் கொள்கை?

மக்களின் அத்தியாவசிய தேவை இதுவல்ல. மக்களின் வருமான வழியை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைப்தே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...