6 89
இலங்கைசெய்திகள்

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்

Share

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்

மறைந்த மன்மோகன் சிங் இந்தியாவின் (India) பிரதமராக இருந்த காலத்தில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து பெற்றிருந்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் (வயது 92) (Manmohan Singh) மறைவுக்கு எமது மனப்பூர்வமான அஞ்சலிகள்.

அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்.

2011 இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான கூட்டறிக்கையில் “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை ஏற்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியைப் பெற்றவர்.

அவர் பிரதமராக இல்லாத சமயத்திலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது நாம் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி உரையாடியிருந்தோம்.

qஇந்தியாவின் பொருளாதார எழுச்சிக்குக் காரணகர்த்தாவாக இருந்த அன்னாரின் மறைவுக்கு மீண்டும் எமது மனப்பூர்வமான அஞ்சலிகள் என்றுள்ளது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...