4 40
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 4 லட்சத்து 38 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.

நேற்று காலை 11 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

அவர் வைத்திருந்த சூட்கேஸில் 04 கிலோகிராம் 388 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் அடங்கிய 05 பார்சல்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ​​குறித்த நபரும், அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...