3 1 9
இலங்கைசெய்திகள்

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

Share

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

தெழுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் மீண்டும் காவல்துறையில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் அண்மையில் உயிரிழந்தார்.

அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை சென்ற நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன் அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் நான் எந்தத் துறையையும் மற்றும் அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும் மற்றும் அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவ்வாறான சூகூழ்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று (25) காலை 11 மணிக்கு முன்னிலையாகுமாறு சிக்கடாபள்ளி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அல்லு அர்ஜுனிடம் 20 இற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பவுன்சராக இருந்த ஆண்டனி என்பவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவம் நடந்த அன்று ரசிகர்களை தள்ளி விட்டமைதான் கூட்ட நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தியா தியேட்டருக்கு அழைத்து சென்று அன்று நடந்ததை மீண்டும் செய்து காட்ட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...