12 12
இலங்கைசெய்திகள்

போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்

Share

போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்

சபாநாயகர் அசோக ரன்வல (Asoka Ranwala) நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளினால் அவர் சபாநாயகர் தனது பதவியை பதவி விலகல் செய்தமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவொன்றை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல நேற்றையதினம் (13.12.2024) தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வெல(ashoka rangwalla) தனது பட்ட தகுதியை நிரூபிக்க முடியாமல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஆளும் அநுர அரசின் மற்றுமொரு எம்பியின் பட்ட தகுதி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில்(npp) இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின்(Kosala Nuwan Jayawira) கல்வித் தகைமை தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று அவர் விளம்பரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...