16 8
இலங்கைசெய்திகள்

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி : சிக்கிய பெண்கள்

Share

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி : சிக்கிய பெண்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்த மூன்று பெண்கள் மற்றும் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

களுத்துறை(kalutara) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பகுதியில் இயங்கிய விபசார விடுதியே முற்றுகையிடப்பட்டுள்ளது.

களுத்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, புளத்சிங்கள மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், முகாமையாளர் மொரட்டுவையைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 4,000 ரூபாய் பெறுமதியான சேவைகளை வழங்கியுள்ளதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்துள்ளதாகவும் காவல்தறையினர் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...