16 8
இலங்கைசெய்திகள்

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி : சிக்கிய பெண்கள்

Share

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி : சிக்கிய பெண்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்த மூன்று பெண்கள் மற்றும் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

களுத்துறை(kalutara) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பகுதியில் இயங்கிய விபசார விடுதியே முற்றுகையிடப்பட்டுள்ளது.

களுத்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தல, புளத்சிங்கள மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், முகாமையாளர் மொரட்டுவையைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 4,000 ரூபாய் பெறுமதியான சேவைகளை வழங்கியுள்ளதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்துள்ளதாகவும் காவல்தறையினர் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...