நிறுவனமொன்றின் மதுபான உற்பத்தி உரிமம் அதிரடியாக நீக்கம்
டபிள்யூ.எம்.மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நிறுவனம் மது வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 3% மாதாந்தத் தொகையான 5.7 பில்லியன் ரூபா மதுவரி திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களும் டிசம்பர் (31) க்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் மதுவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.
மது வரி கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.