16 2
இலங்கைசெய்திகள்

கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளில்…நாடாளுமன்றில் எழுந்த கேள்வி

Share

கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளில்…நாடாளுமன்றில் எழுந்த கேள்வி

கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற முஜுபுர் ரஹ்மான் (Mujibur Rahman) கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு தெரிவித்துள்ளதாவது, “ஒரு நாடாக, நாம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல முடியவில்லை.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற அண்டை நாடுகள் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மரியாதை காரணமாக முன்னேறியுள்ளன.

76 ஆண்டுகளாக தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசி வருகிறோம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த விடயத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும்.

அரசாங்கம் மிகவும் அரிதான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது, ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகாவுக்கு இவ்வாறானதொரு மக்கள் ஆணை கிடைத்தது.

ஆனால் அவராலும் இந்த பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு முன்னேற முடியவில்லை, நீங்கள் ஒரு நல்ல பயணத்தை நடத்த சட்டத்தின் ஆட்சியை நிறுவ தயாராகி வருகிறீர்கள்.

ஆனால், உயர் பதவிகளில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...