இலங்கைசெய்திகள்

ஒரு துண்டு காகிதத்தைக் கூட பார்க்காமல் பேசிய ஜனாதிபதி – பிரதமர் வழங்கிய விளக்கம்

Share
2 1 5
Share

ஒரு துண்டு காகிதத்தைக் கூட பார்க்காமல் பேசிய ஜனாதிபதி – பிரதமர் வழங்கிய விளக்கம்

ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். அவர்கள் தெரிவிப்பதை செவிமடுங்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (3.12.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வரலாற்றில் ஒரு ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றம். பாரம்பரியமான தேர்ந்த அரசியல் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர், இந்தச் செய்தியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட காலமாக, நமது நாட்டின் நிர்வாகம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது, இதன் காரணமாக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். மக்கள் நிராகரிப்பது அரசியலை அல்ல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தையே நிராகரிக்கின்றார்கள்.

எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எங்களிற்கு இந்த தேசத்தின் பிரஜைகள் விடுத்துள்ள சவாலை கரங்களில் எடுங்கள் பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுங்கள் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை சிறந்த இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...