20 3
இலங்கைசெய்திகள்

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கடந்த அரசாங்கத்தின் போது 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வௌிநாட்டு கடவுச்சீட்டுக் கொள்வனவு தொடர்பான விலைமனு வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி எபிக் லங்கா பிரைவேட் நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்றையதினம் (03.12.2024) சீராக்கல் மனு ஊடாக அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன (Sumathi Dharmawardena) இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

இந்த மனு முகமது லஃபார் தாஹிர் (Lafar Tahir) மற்றும் பி. குமாரன் ரத்னம் (P. Kumaran Ratnam) ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பான கண்காணிப்புகளை சமர்ப்பிக்க அந்த குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, குறித்த கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதைத் தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்குமாறு தமது வாடிக்கையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு பிரதிவாதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது தொடர்பான விசாரணையை ஜனவரி 23 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...